Tuesday, December 5, 2017

" எதுக்கும் கவலைப் பட வேண்டாம் ஸ்வாமி இருக்கார் "

ஸ்ரீ கணேச சிவாசாரியார் அவர்கள் 
நாம் பல கோயில்களைத் தரிசிக்கச் செல்லும்போது மனதுக்கு இதமாக ஆலய தரிசனம் செய்து வைப்பவர்களை சந்திக்கிறோம். அவர்களது அயராத சேவையைக் கண்டு அதிசயிக்கிறோம். எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குத் தொண்டு செய்வதொன்றையே தனது வாழ்நாளின் இலட்சியமாகக் கொண்டு வாழ்பவர்கள் இத்தகையவர்கள். சிவனருளால் தனக்குக் குறை எதுவும் இல்லை என்று பெருமிதமாகக் கூறிக் கொண்டு குக் கிராமத்தில் ஏழ்மை நிலையிலும் சிறிதளவு அங்கலாய்ப்பும் கூட  இல்லாதவர்களைப் பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. இன்றைய சமூகம் அவர்களைப் போற்றிக் காப்பாற்றத் தவறி விட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். கோயில் முறை உள்ள நாட்களில் எந்த அசௌகர்யம் வந்தாலும் பொருட்படுத்தாமல்  பூஜை ஒன்றையே இலக்காகக் கொண்டு தம்மை இறை பணிக்கு  அர்ப்பணிப்பவர்களுக்கு நாம் நன்றி செலுத்தத் தவறி விட்டோம்.

 நிலைமை இப்படி இருக்கும்போது, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது அல்லவா? எனவே, கோயில் முறை இல்லாத காலங்களில் வெளியூர் சென்று கும்பாபிஷேகங்கள் செய்வித்தும், வீடுகளில் சுப காரியங்கள் செய்வித்தும் பொருள் ஈட்டி, மிகுந்த சிரமத்துடன் மாதம் தோறும் நாட்களைத் தள்ளவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். எதிர் காலத்தைப் பற்றி யோசிக்க என்ன இருக்கிறது? 

மயிலாடுதுறையில் இளமைக் காலத்தில் வசித்த காலத்தில் பக்கத்து வீட்டில் இருந்த சிவாசார்ய குடும்பமும் மேலே குறிப்பிட்ட நிலையில் தான் இருந்தது. சிவாகமத்தில் நன்கு தேர்ச்சி பெற்றதோடல்லாமல் ஆலய பூஜையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பம் அது. சகோதரர்கள் தங்கள் குடும்பங்களோடு வசித்துக் கொண்டு தங்களது ஆலயத்திற்குச் சென்று பூஜைகளைச் செய்து வந்தனர். அப்போதெல்லாம் மழைக் காலங்களில் காவிரி கரை புரண்டு ஓடும். படிகளைக்கூடப் பார்க்க முடியாது. ஆற்றின் நடுவில் நந்தி மண்டபம் ஒன்று உண்டு. அதிலுள்ள நந்திகேசுவரருக்கு இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிவாசாரியார், ஒரு கையால் நைவேத்தியத்தை சுமந்து கொண்டு மறு கையால் ஆற்று நீரை விலக்கிக் கொண்டுபோய், அபிஷேக ஆராதனைகள் செய்வதைக் கண்டிருக்கிறோம்.

அக்குடும்பங்களில் ஒன்றாக, பக்கத்திலுள்ள பாண்டூரைச் சேர்ந்த சிவாசார்யக் குடும்பமும் வசித்து வந்தது. அக்குடும்பத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ கணேச சிவாசாரியார் அவர்கள், திருவாரூர் செல்லும் வழியிலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் ஆலய பூஜையைச் செய்து வந்தார்கள். 
 பரமேசுவரன் கஜ சம்ஹாரம் செய்ததோடு ஞானோபதேசம் செய்த இந்த அற்புதத்தலத்திற்கு இவரோடு பலமுறை சென்றதுண்டு. கோயிலின் பல்வேறு சிறப்புக்களை விளக்குவதோடு, நுட்பமான பூஜை முறைகளையும் விளக்குவார். யந்த்ர தரிசனம் செய்துவைக்கும்போது, ஸ்ரீ ருத்ரத்தில் வரும், " பரிணோ ருத்ரஸ்ய " என்ற பகுதியைச் சொல்லச் சொல்லித் தீபாராதனை காட்டுவார். அவ்வளவு பய பக்தியோடு அவர் அதைச் செய்யும்போது நம்மை அறியாமல் ஆனந்தக் கண்ணீர் விடுவோம். நமக்கு சிவபக்தி அதிகமாவதற்கு முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர். 

சுவாமி தரிசனம் செய்ய வரும்போது வெறும் கையோடு வரக் கூடாது என்று வலியுறுத்துவார். தேங்காய்,பழம் இல்லாவிட்டாலும் கற்கண்டோ , உலர்ந்த திராக்ஷையோ கொண்டு வரலாமே என்பார். ஞானம் வருவதற்கு மூல மந்திர ஜபம் செய்து தியானிக்க வேண்டியது முக்கியமானது என்று சொல்லுவார். " நானே உனக்கு வல்லப மகா கணபதி , சுப்பிரமணிய ஜபங்களை உபதேசிக்கிறேன் " என்று சொல்லி க்ருத்திவாசரின் மகாமண்டபத்தில் அடியேனுக்கு அந்த ஜபங்களை எடுத்து வைத்து விட்டு, நிறைய ஆவர்த்தி செய்து வந்தால் மந்திர சித்தி ஏற்படும் என்றும் சொல்வார். தன்  நினைவாக ஒரு ஸ்படிக ருத்ராக்ஷ மாலையையும் தந்து ஆசீர்வதித்தார்.   

வயது முதிர்ச்சியின் காரணமாக வழுவூர் செல்வது நின்று போன நிலையிலும்  தனது இல்லத்தில் இருந்தபடியே மனதாகிய இல்லத்தில் நீங்காது விளங்கிய ஞான சபேசுவரப் பெருமானை சதா காலமும் தியானிப்பது இவரது வழக்கம். நேரில் சந்திக்கும்போதெல்லாம் அந்த மூர்த்தியின் பெருமைகளை சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைவார். அந்த ஊரின் புராணம் புத்தக வடிவில்  வெளிவந்தவுடன்  அதன் ஒரு பிரதியைத்  தந்து, " இதை வைத்துக் கொள். உனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்" என்றார். பின்னர் அப்புத்தகத்தைப் படித்ததால் வழுவூரைச் சுற்றியுள்ள சில தலங்களின் இருப்பிடங்கள்  தெளிவாக விளங்கின . இன்னும் தெளியவேண்டியவை பல உண்டு. 

சுமார் ஆறு மாதங்கள் முன்னர் அவரை சந்தித்தபோது அவரது நிலை சொல்லும்படியாக இல்லை. யாரோடு பேசுகிறோம் என்பதும் தெரியவில்லை. முகத்தில் மட்டும் தேஜஸ் சற்றும் குறையவில்லை. வீட்டிற்குள் நுழைந்தவுடன் எப்பொழுதும் ஒருமையில் அழைப்பவர் அன்றைய தினம் " வாங்கோ " என்று அழைத்தார். நினைவாற்றல் இழந்த நிலையிலும் வருபவர்களை வரவேற்பது மட்டும் குறையவில்லை. யார் வந்திருப்பது என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களில் ஒரே வார்த்தை அவரிடமிருந்து உதித்தது:  "எதுக்கும் கவலைப் பட வேண்டாம். ஸ்வாமி இருக்கார் " என்பதே அது. இந்த ஆசி மொழிகளைக் கேட்டுக் கண்ணீர் பெருக்குவதைத் தவிர மேலும் அவரிடம் பேசத் தோன்றவில்லை. 

அதுவே அவரைக்  கடைசியாக சந்தித்தது. சுய நினைவுடன் இருக்கும்போது அவரிடம் எத்தனையோ முறை ஆசிகள் பெற்றிருந்தும், இவ்வாறு சுய நினைவில்லாத போது பெற்ற ஆசிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று நினைக்கத் தோன்றியது. மூலமாகிய ஞான தீபத்திலிருந்து பல தீபங்கள் ஏற்றப்படலாம். இருந்தாலும் மூலத்திற்கு நிகர் எது? 

சென்ற கும்பாபிஷேகத்திற்கு முன்னர்  திருப்பணிகள் நடந்த சமயம் வழுவூர் சென்றிருந்தபோது மாலை நேரம். நமக்கும் அத்திருப்பணியில் பங்கேற்கும் பாக்கியம் கிட்டுமா என்று மனம் ஏங்கிய போது, " ஒவ்வொரு சன்னதியையும் ஒரு உபயதாரர் திருப்பணி செய்கிறார். ஒரே ஒரு சன்னதி விமானம் மட்டும் திருப்பணி செய்வதற்கு யாரும் முன் வரவில்லை. அது எந்த சன்னதி தெரியுமா? எந்த மூர்த்திக்கு முன்னால் நின்று கொண்டு வரும்போதெல்லாம் தேவாரம் பாடுவாயோ அந்த கஜ சம்ஹார மூர்த்தி சன்னதி தான் . அதை  நீயும் உன் நண்பர்களும் ஏற்றுச் செய்யலாமே " என்றார். உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.  அதன்படியே அத்  திருப்பணியைச்  செய்யும் பாக்கியத்தை க்ருத்திவாசப் பெருமான் அருளினான். 

நமது அமைப்பின் மூலம் கிராமக் கோயில்களில் பணி  புரியும் சிவாச்சாரியார்களைக் கெளரவிக்கும்போது இவரைத்  தம்பதி சமேதராய் மேலும் நான்கு ஆலய சிவாசார்ய தம்பதிகளோடு திருவாழ்கொளிபுத்தூர் ஆலயத்திற்கு அழைத்து வந்தபோது எல்லோருமாக ஆசீர்வதித்ததை வாழ்க்கையில் பெற்ற பெறும் பேறாகக் கருதுகிறோம். இவ்வாறு ஞானச் சுடர் விளக்குகளைத் தோற்றுவித்து அவற்றை அணையாமல் தூண்டிப் பாதுகாத்து வந்த மூல தீபம் 1.12.2017 அன்று காலையில் கயிலை நாதனின் மலரடிகளைச் சென்றடைந்தது. " தேச விளக்கெல்லாம் ஆன   தூண்டு சுடர் அனைய சோதி"யுடன் சோதியாகக் கலந்து விட்டது. 

Thursday, October 19, 2017

அர்ச்சகர் நலனும் அரசின் கடமையும்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                        உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                              அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                      பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.
                                                                                   - பெரிய புராணம்                                                
    மக்கள்  தொகையில் எந்தெந்தப் பிரிவில்  எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுக்கிறார்கள். அப்போது அவர்கள் சார்ந்த மதம்,மொழி, இனம் ,செய்யும் தொழில் ஆகிய பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனால் மக்களின் வளர்ச்சியைக்  கண்காணி ப்பதற்கு  எளிதாகிறது என்று கொள்வோம். ஒவ்வொரு குடிமகனும் முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததைவிடப் பொருளாதார நிலையில் முன்னேறியிருக்கிறாறா   என்பதை நோக்கும்போது  நாட்டின் முன்னேற்றமும் அறியப்படுகிறது. ஒருக்கால் ஏதோ காரணத்தால்  பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களது முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுவது அரசின் கடமை ஆகும். 

 தமிழகத்தைப் பொறுத்தவரைப்  பல்லாண்டுகளாக மேற்கண்ட சமநோக்கோடு செயல் படாமல் இருக்கக் காரணம் அவ்வாறு செயல் படுத்த விடாமல் எதிர்ப்பவர்களே. எந்தப்பலனும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விளையாதபோது அரசாங்கம் வீண் செலவு செய்வதாகவே தோன்றுகிறது. பொருளாதாரத்தில் முன்னேறாவிட்டாலும் பரவாயில்லை. பின் நோக்கிப் போகும் அர்ச்சகர் சமுதாயத்தின் மீது சிறிதும் இரக்கம் காட்டாதது என்? எதற்கெடுத்தாலும் மதச் சாயமும் சாதிச் சாயமும் இன்னும் எத்தனை காலம் தான் பூசப்போகிறார்கள்? தமிழக மக்கள் தொகையில் சுமார் ஒன்று அல்லது இரண்டு சத வீதமே இருக்கும் பிரிவினர்  சிறுபான்மையர் என்று கருதப்படாவிட்டாலும் புறக்கணிக்கப்பட்டவர் என்றாவது கருதப்படலாம் அல்லவா?  

பொருளாதாரத்தை வேண்டுமானால் விட்டுத்தள்ளுங்கள். அந்தப்பிரிவே இல்லாமல் போய் விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரிய கோயில்களில்  தட்டில் விழும் காசுகளைப் பார்த்தே பழக்கப்பட்ட பொறாமையாளர்கள், மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு கிராமங்களில் அல்லல் படுபவர்களை  ஏன் காண்பதில்லை? எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பவர்கள் இது போன்ற வருமானம் இல்லாத கோயில்களில் எத்தனை நாட்கள் பணியாற்ற முடியும்? வீம்புக்காக வேண்டுமானால் எது வேண்டுமானாலும் பேசலாம். செய்து பார்த்தால் அதன் அருமையும் சிரமங்களும் புரிய வரும். 

விரக்தியின் விளிம்பில் இருக்கும் அர்ச்சகர் சமூகம், குலத் தொழிலை இன்னமும் செய்தால் ஆதரிப்பார் இல்லை எனக் கருதி, வேறு வேலைக்குச் செல்ல எத்தனிக்கிறது. வேலைக்குச் செல்லும் அர்ச்சகர் குலப் பெண்கள்,தாங்கள் மணக்க இருக்கும் தங்களது குல ஆடவர்கள் கோயில் வேலை செய்பவராக இருந்தால் துயரங்கள் தொடரும் எனக் கருதத் துவங்கிவிட்டதால் ஆண்களுக்குத் திருமணம் ஆகாமல் காலம் பூராவும் பிரமச்சாரிகளாக இருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. இதற்கு அரசாங்கமும் மடாலயங்களும் தீர்வு காணக் கடமைப் பட்டவர்கள். ஆனால், அவர்களோ அறிக்கை விட்டு விட்டு அமைதி ஆகி விடுகிறார்கள். தமது நிர்வாகத்திற்குட்பட்ட ஆலயங்களின் அர்ச்சகர்களுக்குப் போதிய வருவாய் அமைத்துத் தந்து அறநிலையத்துறையும் அவ்வாறே செய்வதற்கு முன் உதாரணமாகத் திகழலாமே! 

அர்ச்சகர் நலனைக் காப்பதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானா அரசுகள் சீரிய திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அர்ச்சகர் தொழிலைச் செய்து வரும் ஆண்களை, அக்குலப்பெண்கள் மணக்க முன்வந்தால் அவ்விருவருக்கும் மூன்று லக்ஷ ரூபாய் நிதி உதவியும் திருமணச் செலவுக்கு  ஒரு லக்ஷமும் தருவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்களும் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அடுத்த மாதம் முதல் பெறுவர் என்ற அறிவிப்பு அச்சமூகத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தர வல்லதாகும். அது  மட்டுமல்ல. எப்போதெல்லாம் அரசு ஊழியர்கள்  சம்பள உயர்வு பெறுவார்களோ அப்போதெல்லாம் அர்ச்சகர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போது கேட்கலாம். இது போன்ற நலத்திட்டங்களைத்  தமிழக அரசு வழங்காதது ஏன் என்று. அறிவிப்பதால் அடுத்த தேர்தலில் பலன் இருக்குமா என்றுதான் யோசிக்கிறார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. மக்கள் தொகையில் மிகச் சொற்ப சதவீதமே இருப்பவர்களால் வெற்றி- தோல்வியை  நிர்ணயிக்க முடியாது என்ற பட்சத்தில் அவர்களுக்கு இரக்கப்படுவதற்குப் பதிலாக, நிச்சயம் வோட்டு கிடைக்கும் பிரிவுக்கு வாரி வழங்குவதே வெற்றி தர வல்லது என்ற கணிப்பே மேலோங்குகிறது. உண்மைதான். அர்ச்சக சமூகத்திற்கு உதவும் அரசு பிரதி பலனை எதிர்பாராது சேவையாகக் கருதினால் மட்டுமே அக்குலம் வாழ முடியும். இல்லாவிட்டால் ஆந்திரத்தையும் தெலுங்கானாவையும் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.   

Saturday, September 23, 2017

சிவாகம பாடசாலைகள்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                         

உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                                   

அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                             

 பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.                                                                                                                                                       
                                                                                                       - பெரிய புராணம் 
                                                
                                                                சிவாகம பாடசாலைகள் 
                                                                  சிவபாத சேகரன் 

வழிபாடு என்பது பழங்காலந்தொட்டே மரபை ஒட்டியும், தேசாச்சாரத்தை ஒட்டியும், காலாசாரத்தை ஒட்டியும் நடைபெற்று வருகிறது. அடிப்படை ஒன்றாக இருந்தாலும் , மேற்கண்ட காரணங்களால் சிறிய மாறுதல்கள் இங்குமங்குமாக இருப்பது இயல்பு. அவரவர் தமக்குத் தோன்றியபடி வழிபாடுகள் செய்வதானால், தெறி கெட்டுப் போகும் நிலை உருவாகும். இது பற்றியே, நம் முன்னோர்கள் ஆலய வழிபாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார்கள். அப்படி இருந்தும், எல்லை தெய்வங்கள்,காவல் தெய்வங்கள் ,நடுகல் ஆகியவற்றின் வழிபாட்டு முறைகள் ஊருக்கு ஏற்பத்  தொடர்ந்து வருவதைக் காண்கிறோம். 

திலதைப்பதி பாடசாலை மாணவர்களில் சிலர் 
ஆகம அடிப்படையிலான வழிபாட்டில் ஆலய அமைப்பு முதல், அனைத்துக்  கிரியைகளும் விளக்கப்பட்டுத்  தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆகமக் கல்வியை சிறு வயது முதல் ஏழு ஆண்டுகளுக்குப் போதித்து, பரார்த்த பூஜைக்குத் தயார் படுத்தினார்கள்.  ஆகம பாடசாலைகள் பல இடங்களில் அமைக்கப்பெற்று மன்னர்களது ஆதரவையும்,மக்களது ஆதரவையும் பெற்றன. காலப் போக்கில் கற்போர் எண்ணிக்கை குறைந்து, பலவிடங்களில் பாடசாலைகள் மூடப் பட்டன. எஞ்சிய பாடசாலைகள், நல்ல மனம் கொண்ட அன்பர்களது ஆதரவோடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை, பிள்ளையார்பட்டி,திருப்பரங்குன்றம், குடந்தை, திருவாலங்காடு, திலதைப்பதி ஆகிய ஊர்களில் நடைபெறும் சிவாகம பாடசாலைகளை சில உதாரணங்களாகக் காட்டலாம். 

முக்தீச்வரர் ஆலயம்,  திலதைப்பதி 
திலதைப் பதி என்ற தேவாரத் தலம் மக்கள் வழக்கில் தற்போது செதலைப்பதி எனப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள பூந்தோட்டத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.இங்குள்ள நரமுக விநாயகரைத்  தரிசிக்க அநேகர் வருகை தருகிறார்கள். தில தர்ப்பணபுரி என்றும் வழங்கப்படும் இத்தலத்தில் முன்னோர்களுக்குச் செய்யப்படும் தர்ப்பணம், சிறந்த பலன்களைத் தர வல்லது. இந்த ஆலயத்தின் சிவாச்சாரியாரது பெருமுயற்சியால் ஒரு சிவாகம பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ நாற்பது மாணாக்கர்கள் ஆகமம் கற்று வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

அதி காலை முதல் மாலை வரை ஆகமம்,வேதம் மட்டுமல்லாமல் ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ், திருமுறை, யோகா , கணினி போன்றவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மாலையில் விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழாண்டு பயிற்சிக்குப் பிறகு மாணவர்கள்  தத்தம் ஊர்களுக்குத்திரும்பி , தந்தையுடன் இணைந்து சிவாலய பூஜை செய்கிறார்கள். தீக்ஷையின் முக்கியத்துவத்தை இப்போது முதற்கொண்டே உணர்ந்திருக்கிறார்கள். பூஜை செய்து வைத்தால் தக்ஷிணை  இவ்வளவு வேண்டும் என்று கேட்கவே கூடாது என்று தங்களுக்குக்  குருநாதர் அறிவுறுத்தியதை  நினைவு கூர்கிறார்கள். இவ்வாறு படிப்போடு,நற்பண்புகளும் இங்கே கற்பிக்கப் படுகின்றன.  இவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையத்  திருத் திலதைப் பதியில் கோயில் கொண்டு நீங்காது அருள்புரியும்  சுவர்ணவல்லி அம்பிகா சமேத முக்தீசுவரப் பெருமானைப்  பிரார்த்திக்கிறோம். 

Ways of worship may differ from place to place due to cultural and regional  differences. By and large, the basics remain the same under a near standardised procedure. South Indian Temples , especially those in Tamilnadu follow Sivagamas which provide a treatise on Temple construction, rituals etc.  Schools which teach Sivagamas were started at various places under the patron ship of Kings and philanthropists. The Modern pattern of education and lifestyle has not spared even this "Guru Kula " type of education which is entirely focused on "Parartha Puja", meant for the welfare of mankind. Though many such schools had to be closed , there are Veda- Agama schools at places like Mayiladuthurai,Pillayarpatti, Thiruparankunram, Kumbakonam, Thiruvalankadu, Thilathaippathi, to name a few. 

The Veda- Sivagama Patasala at Thilathaippathi is located 3 km away from Poonthottam, a place on Mayiladuthurai - Thiruvarur road. Muktheeswara Swami Temple of this place is sung in Thevaram by Thirugnana Sambandhar , some 1400 years ago. Lord Rama worshipped the Main deity here and performed Pithru tharpanam for his father, Dhasaratha. People visit here to do Tharpanam on Amavasya days and worship the deities. Nara Mukha Adhi Vinayaka sannadhi in front of the Temple is visited by devotees on Sankata Hara Chathurthi days. 

The Sivacharya of this Temple has taken pains to conduct a Sivagama Patasala close to the Temple. About 40 students learn not only Veda and Sivagama but also receive a fair knowledge of English, Tamil, Hindi, Thirumurai, Computer, Yoga etc. which spreads throughout the day right from 4.30 A.M. After completing the 7 year course, the students return to their parents and start doing daily rituals at the temples.They proudly declare that they would not demand money from the worshippers and accept whatever be offered.  Let us pray for their bright future and help them and the Patasala in whatever way we can.   
                                                                       ***************

குடும்ப சூழ்நிலைகளால் ஆகமக்கல்வி முழுதும் பெற இயலாமல் தந்தை விட்டுச் சென்ற சிவாலய பூஜையைச் செய்துவரும்  சிவாசார்யர்களுக்குக்  கொடுமுடியில் 13 நாட்கள் ஒரு ஆகம பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவும் தங்குமிடமும் இலவசம். ஆகமக் கல்வி பெற விழைவோர் இந்த நல்ல வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.  

A sandwich course is being organised at Kodumudi for 13 days for the benefit of those Sivacharyars who could not learn Agama for 7 years due to family problems. Food and lodging are offered free of cost for the participants. It is desired that those could not go for Gurukula education may avail this opportunity to learn various topics as shown in the invitation below:  
  


Monday, August 21, 2017

புகழ்த்துணை நாயனார் சரிதம் தரும் பாடம்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                         உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                             அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                     பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து. 
                                                                                           - பெரிய புராணம் 
                             
                புகழ்த்துணை நாயனார் சரிதம் தரும் பாடம் 

                                                     சிவபாதசேகரன் 

ஆலய பூஜை என்பது ஆத்மார்த்தமாக செய்ய வேண்டியதாகும். தன்னை முழுதுமாக அர்ப்பணித்துப்  பிரதி பலனை எதிர் நோக்காமல், உலக நலனுக்காகச் செய்யப்படவேண்டிய புனிதமான கடமையை நிறைவேற்றவே தலைமுறை தலைமுறையாக ஆதிசைவ குலம் அத் தொண்டினைச்  செய்து வருகிறது. வாழையடி வாழையாக இறைத்தொண்டை எந்த விதமான சோதனை வந்தாலும் விட்டு விடக்கூடாது என்று வைராக்கியத்துடன் அசௌகரியங்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் முப்போதும் திருமேனி தீண்டிக்  குறைவற நித்திய பூஜைகள் செய்யக் கடமைப் பட்டகுலம் அது. 

Adhi Saiva community has been at the dedicated service by doing Parartha puja in Shiva Temples for centuries with the only aim to pray God for the welfare of the Whole World. Despite hurdles that come on the way, they continue to stick to this noble service regardless of very poor income.

இந்தக் காலம் போல எக்காலத்தும் பல சோதனைகளைக் கடந்து தன்  கடமையைச் செய்துவரும் ஆதிசைவர்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் குறைந்து போயிருக்கக் கூடும். ஆனால் சீரிய எண்ணத்தில் என்றுமே குறையக் கூடாது. இது ஒரு சோதனைக் காலம் தான். மாயைகள் பலவிதத்திலும் தங்கள் சக்தியால் செயலிழக்கச் செய்யும் என்பதும் உண்மை. கலை ஞானம் கல்லாமே கல்லாலின் கீழிருந்து கற்பித்த கடவுளை அன்றி வேறு எந்தத் தெய்வத்திடமும் சிந்தை செலுத்தாமல், மானுடர்களின் ஆசை வார்த்தைகளிலும், மாயைகளிலும் சிக்காமல் வாழ்வது என்பது மிகக் கடினம்தான். 


Their number has certainly dwindled but their dedication still remains. At a time when luxurious life style has literally swarmed the whole world, it becomes extremely difficult for them to remain secluded from these "worldly pleasures "


ஆலயங்கள் அரசர்களாலும்,இறை நம்பிக்கை உள்ளவர்களாலும் பராமரிக்கப்பட்டு வந்த காலத்தில் ஆதி சைவப் பரம்பரைகள் சிறு கிராமங்களிலும் குறைவற வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். மானியங்கள் உரிய காலத்தில் வீடு தேடி வந்ததால் எதற்கும் கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லாமலிருந்தது. எப்பொழது அதற்குக் குந்தகம் ஏற்பட்டதோ அன்று முதல் அல்லல் வாழ்க்கை ஆரம்பமானது. மேலை நாட்டுக் கல்வியும்,நவீன சாதனங்களும் , பிறருக்கு நிகராக நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் நாடளாவி ஏற்பட்டு விட்டபோது இப்பரம்பரையும்  எப்படி விதி விலக்காக இருக்க முடியும்? 

Temples were built,renovated and managed by Kings and God fearing people by extending liberal contributions. The trouble strated when the dues meant from the temple lands were stopped abruptly for over six decades. Modern education and the desire to earn more has not spared this community to some extent.


ஆகமக் கல்வி கற்றவர்களையும் மேலை நாடுகளில் வசிக்கும் நம் நாட்டவர்கள் ஆசை காட்டிக் கூட்டிச் சென்று விடும்படி ஆகி விட்டது. கிராமங்களில் மக்கள் ஆதரவும் குன்றியமைக்கு முக்கிய காரணம், இறை நம்பிக்கையோடு தொண்டாற்றி வந்தவர்கள் இடம் பெயர்ந்து விட்டபடியால் தான். வாழ்வாதாரமே அபாய நிலைக்கு வந்து விட்டபடியால் வேறு வழியின்றி சிலர் பிழைப்புக்காகத் தமது உரிமைத் தொழிலைச் செய்யாமல் பிற வேலையைத் தேடிப்  போகும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது. ஆலய பூஜை செய்பவர்களுக்கு அரசாங்கம் சில நூறுகளே சம்பளமாகத் தருவதால் அப்படிப்பட்டவர்களுக்குத் திருமணம் ஆவதில் தாமதம் ஆகிறது. 

Temples abroad even hire learned Sivacharyars and the better living standards do attract others as well. Those who remain at Homeland start looking for other professions. Neither the Government nor the society take care of them on compassionate grounds. To say the least, the poor status make them  remain as bachelors.

இந்தப் பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும்?  வெளி ஊர்களிலும்,நாடுகளிலும் வசிப்பவர்கள் மனம் வைத்தால் எவ்வளவோ ஆதி சைவக் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியும். மனம் வைப்பவர் சிலரே. ஊதாரித் தனமாகச் செலவு செய்யத் தயாராக இருக்கும் அவர்கள் இந்த சமூகத்திடம் இரக்கப் படுவது அவ்வளவு சுலபமல்ல. அரசாங்கத்திடம் சில நூறுகளை மட்டும் சம்பள உயர்வாகப்  போராடி வாங்கலாம். ஆனால் அந்த ஊதிய உயர்வு சில நாள் செலவுக்கு மட்டுமே துணையாக இருக்கும். ஆலயங்களுக்கு உரிய நெல் குத்தகையை மீட்டுத்தந்தால் சிப்பந்திகளுக்கும் வருவாய் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் அவ்வளவு சுலபமாக நடக்கக் கூடியதா என்ன ?

Their living conditions can be improved by philanthropists at Home and abroad as the Government can raise their salary very little which can not meet the daily expenses.

விரக்தி அடைபவர்கள் , தற்கால சூழ் நிலையில் எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடும். அதற்குப் பிறகு யாராலும் அதை மாற்ற முடியாது. இழந்தது இழந்ததுதான்.  யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம் என்று சொல்வது வேண்டுமானால் சுலபம். எந்த வித வருமானமே இல்லாத கிராமக் கோவில்களில் போய் எத்தனை நாட்கள் மற்றவர்களால் பணியாற்ற முடியும்? அதுவும் பரம்பரை பரம்பரையாக!! வீம்புக்காகப் பேசாமல் யதார்த்த நிலையைப்  புரிந்து கொண்டு தம்மாலான உதவியைச் செய்வதே அறிவுடைமை. 

Others can only offer themselves to become  archakas but it is very difficult for them to remain in rural areas where there is negligible income leave alone to live there permanently as the future  generations will not follow suit.
புகழ்த்துணை நாயனார் , மனைவியாருடன் 

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்  நாயன்மார்களது சரித்திரம் நமக்குத் துணையாக இருந்து புரியாத பாடங்களைப் புரிய வைக்கின்றன. குடந்தைக்கு அண்மையில் உள்ள அரிசில் கரைப் புத்தூர் சிவாலயத்தில் பணி  புரிந்த ஆதி சைவரான புகழ்த்துணை நாயனாரது சரிதம் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக விளக்கும். கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் ஊரிலிருந்த அனைவரும் வெளியேறியும் பசியாலும் களைப்பாலும் அயர்வுற்ற புகழ்த்துணையாரும் அவர்தம் மனைவியாரும் மட்டுமே அவ்வூரை நீங்காதிருந்து இறை பணியைத் தொடர்ந்தனர். நாள் தோறும் அரிசிலாற்றில் தண்ணீர் முகந்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒரு நாள் அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது அயர்வு மிகுதியால் குடம் கையிலிருந்து நழுவி, இறைவனது திருமுடிமேல் விழுந்தது. பெருமான்  புகழ்த் துணை  நாயனாருக்கு அப்பஞ்ச காலத்தில் தினமும் படிக்காசு வைத்து அருளினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. சுந்தரரும் சம்பந்தரும் இத்தலப் பதிகங்களில் இச்செய்தியைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றனர். 


It is at this point of time, one can recall the dedication and sacrifice of Pugazhthunai Nayanar described in Periya puranam. He and his wife alone were left in the village called Arisikkaraiputhur near Kumbakonam when a severe famaine drove away the villagers to look for food. The Nayanar remained firm in his dedication by not leaving the Temple Puja at any cost. On a day when he was performing "Abhishekam "to Lord Shiva, he lost control due to hunger and giddiness and the water pot fell on The God Himself. In appreciation of his tireless service The God blessed him with a bowl full of Coins to take care of him until the famine was over. Saiva saints Sambandhar and Sundharar parise the Nayanar in their Hymns of this place.


ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று  புகழ்த்துணையாரது  குருபூஜை விமரிசையாகச்  சிவாலயங்களில் நடத்தப்பெற வேண்டும். நாயனாரது அளவுக்கு எவராலும் அந்த மாதிரி  சூழ்நிலையில் சிவ பூஜையைக் கைவிடாமல் செய்யும் மன உறுதி வருவது மிகக் கடினம். ஆனால் அவர் வாழ்க்கையே ஒரு பாடமாக அமைந்து எப்படிப்பட்ட துன்ப நிலை வந்தாலும் பெருமான் நம்மைக் கை விட மாட்டான் என்ற உறுதியோடு முப்போதும் சிவபூஜை செய்து வரும் ஆதி சைவர்களுக்கு அத்  தெய்வமே துணை நிற்கும்.  இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. 

The Nayanar's Gurupuja is held in the Tamil month of Avani and the star being Aayilyam. Though it shall be difficult for anybody to be as devoted as the Nayanar, others can rededicate themselves on this day and this act can purify them without doubt and lift them up. 



Friday, August 11, 2017

ஸ்ரீ தண்டபாணி சிவாசார்யாரின் சிவத்தொண்டு

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                                           உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                                           அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                                       பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.       
                                                                             - பெரிய புராணம்

ஆதிசைவகுலம் என்பது சிவபெருமான் ஒருவரையே முழுமுதற் கடவுளாகக் கொள்வதோடு, அப்பெருமானையே  குல தெய்வமாகவும்,இஷ்ட தெய்வமாகவும் கொண்டு, உலகம் உய்வதற்காகப் பரார்த்த பூஜையும்,  தம்மை மேலும் புனிதப்படுத்த ஆத்மார்த்த பூஜையும் மேற்கொண்டு, வாழையடி வாழையாக விளங்கி வருவதாகும்.  இளமை முதற்கொண்டே சிவாகமம் கற்ற பின்னர், மண வாழ்க்கை மேற்கொண்டு ஆசார்ய அபிஷேகம்,தீக்ஷை முதலான தகுதிகள் மூலம், பரமேசுவரனை முப்போதும் தீண்டும் நியமத்தை மேற்கொள்வதால் இவர்களை சிவாச்சாரியார்கள் என்றும், பிறருக்குத் தீக்ஷை செய்து வைக்கும் குருவானபடியால் குருக்கள் என்றும் மரியாதையோடு அழைக்கிறோம். 

நித்திய பூஜையைக்  காலம் தவறாது, நியமத்துடன் ஆகம வழிப்படி செய்பவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருக்கிறார்கள். அப்படி இருந்தும், நம்மால் சுவாமிக்கு இவ்வளவுதான் செய்ய முடிகிறதே , இன்னும் எவ்வளவோ செய்து பார்க்க வேண்டுமே என்று குறை படுபவர்களும் உண்டு. இத்தனைக்கும் எந்த வித பொருளாதார வசதி இல்லாமல் இருந்தும் பக்தி சிரத்தை மட்டும் கொஞ்சமும் மாறாதபடித் தொண்டு செய்பவர்களைப் பார்க்கிறோம்.  இப்படிப்பட்ட ஆதிசைவகுலத் தோன்றல்களுள் ஒருவர்தான்  நாம் இங்கு குறிப்பிடும் காலம்சென்ற தண்டபாணி சிவாசாரியார் அவர்கள்.

It has been the tradition of Sivacharya community to dedicate themselves for the worship of none other than Lord Shiva. After undergoing the study of Sivagamas for seven  years they undertake the responsibility of performing Pujas in their ancestral temples. They receive Siva Dheeksha and Acharya Abhishekam after getting married. It is with this  qualification they enter into Sanctum Sanctoram with the traditional dress by wearing Viboothi in their forehead and Rudrakshamala around their neck. Panchakshara Japam is a must for them and they chant Sri Rudram,Chamakam etc when they perform abhishekam to the Lord. Apart from performing Pararthapuja for the welfare of the World, they conduct Athmartha puja at Home. Regardless of the inconvenience, poverty and hardships, there are many Sivacharyars who simply dedicate their lives to keep up the unbroken tradition . It is with gratitude and respect we mention here the selfless service carried out by late Sri Dhandapani Sivacharyar of Thiruvavaduthurai. 


Sri Dhandapani Sivacharyar
திருவாவடுதுறை மாசிலாமணீசுவரர் ஆலயத்தில் பணிபுரிந்து வந்த இந்த அர்ச்சகர் , பெரிய கோயிலில் உச்சி காலத்தை முடித்துக்கொண்டு சைக்கிளில் நைவைத்யத்தை எடுத்துக்கொண்டு, சுமார் 2 மைல் தொலைவிலுள்ள திருக்கோழம்பம் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்திலும், அங்கிருந்து 2 மைல் சென்று பேராவூர் சிவாலயத்திலும், வழியிலுள்ள கறைக்கண்டம் சிவாலயத்திலும்  பூஜையை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 1/2 மணி அளவில் வீட்டுக்குத் திரும்புவார். பிறகு உணவு உண்டுவிட்டுச்  சிறிதே இளைப்பாறியவுடன், மாலை 5 மணிக்குப் பெரிய  கோயிலில் சாயரட்சை, தொடர்ந்து 7 மணி அளவில் இரண்டாம் காலம், 8 1/2 க்கு அர்த்த ஜாமம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார். விழாக் காலங்களில் வேலைப்  பளு  கடினமாக இருக்கும்.   போகும் இடங்களில் எல்லாம் இவரே தரையை சுத்தப்படுத்தி விட்டு, சுவாமிக்கு தீபம் ஏற்றி ,ஆலயக் கிணற்றிலிருந்து அபிஷேகத்திற்கு நீரைத் தோளில் சுமந்து கொண்டு வருவதை எத்தனையோ முறை கண்டிருக்கிறோம். அந்த 85 வயதிலும் ஒரு முறை கூட அலுத்துக் கொண்டதில்லை. மழைக்காலத்தில்  சாலை முழுதும் சேறாகி இருக்கும். சைக்கிளில் இருந்து இறங்கித் தள்ளிக் கொண்டு தான் போவார். அந்தக் கோயில்களுக்குப் போவதால் வருமானம் எதுவும் சொல்லும்படியாக வராவிட்டாலும், " கோழம்பா" என்று சொன்னாலே செல்வம் என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறாரே என்ற நிறைவு கலந்த பதிலே அவரிடமிருந்து வரும். 

After conducting pujas at Sri Masilamaneeswara Swami Temple, Thiruvavaduthurai from dawn to noon, he used to go to nearby villages called Thiruk kozhambam, Peravur and Karaik Kandam for daily pujas. Although he had to do all types of jobs like cleaning the floor and bringing well water on his shoulder he never complained even once about the hardship he faced every day. As the road used to be slushy during rainy days, he had to get down from the cycle and drag the cycle from the slush and proceed. Though the remuneration for going to these places was negligible, he used to quote from Saint Appar's Thevaram Hymn on Thiruk Kozhambam saying that the chanting of Kozhambanatha's name itself would bring wealth. Such a determined and dedicated person he was even at the age of 85! He used to take food at 3.30 at  Home after his return from these places and get ready to go the main temple at 5 p.m. It had to be more tough for him when the work was more demanding during the annual festival.

திருக்கோழம்பநாதருக்குக் கும்பாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது நெடு நாள் கனவு 2000 -ம் ஆண்டில் நிறைவேறியது. பின்னர் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின்  குடமுழுக்கிலும் பங்கேற்றார் . திருவாவடுதுறை ஆதீன 23 வது ஆதீன மகா சந்நிதானம் , இவரது பணிகளைப்  பாராட்டி ருத்ராக்ஷமாலை,பதக்கம், சம்பாவனை ஆகியன அளித்துக் கௌரவித்துள்ளார்கள் . வறுமையின் பிடியில் இருந்தபோதிலும், ஈசனுக்குத் தொண்டு செய்வதையே நோக்கமாகக் கொண்ட இவரைப் போன்ற சிவாசார்யர்களை சைவ உலகம் போற்ற வேண்டும். பிரதிபலனை எதிர்பார்த்தே வாழும் மனிதர்களைக் கொண்ட இவ்வுலகில் இவரைப் போன்றவர்களுக்கு நன்றி செலுத்துவதே நாம் செய்யத்தக்க கைம்மாறு.  

His dream of witnessing the consecration at Thirukkozhambam and Thiruvavaduthurai came true and he was honoured by the then  Pontiff of Thiruvavaduthurai Adheenam for his meritorious service. Though reeling in poverty, he considered himself fortunate to serve the Lord till his end. It is the duty of all Saivites to remember such Sivacharyars with gratitude. We can not give back anything better than this.
                                          *******************
சிவாச்சார்யர்களால்  நடத்தப்பெறும் ருத்ராபிஷேகம், இம்மாதம் (9.8.2017) அன்று திருவாரூருக்கு அண்மையில் உள்ள மாங்குடி மீனாக்ஷி சமேத சுந்தரேசுவர சுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
மாங்குடியில் ருத்ராபிஷேகம்
Rudhrabhishekam was conducted at Sri Meenakshi Sametha Sri Sundhareswara Swami Temple at Mangudi near Thiruvarur on behalf of Sivacharyar community
***********************  
.

  

Tuesday, August 8, 2017

ஆகம சீலர்க்கோர் அம்மான்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்

உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,  

அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்   

பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து. 

                                                                                               - பெரிய புராணம்

It is with great pleasure we welcome our readers to follow our new blog, " SHIVAGNI"  in which we aim to project the pearls from Shivagama , events/festivals held at various places, issues faced by Shivacharya community and attempts to improve their standard of living. We believe that this move can throw more light on the above topics with special focus on community development . For the benefit of those who can not read Tamil script, we thought of presenting the blog in bilingual form. Your suggestions on the published posts are always welcome. 

பாரத நாடு ஒரு புண்ணிய பூமி. எத்தனையோ மகரிஷிகளும்,மகான்களும் தோன்றி இதனை மேலும் புனிதப்படுத்தினார்கள். மக்களை நன்னெறிப்படுத்தினார்கள். செம்மையான பாதை அமைத்து உய்யும் வழியை எளிமைப் படுத்தி அருளினார்கள். வேதம் சொன்ன வழியில் நின்று ஆகமங்கள் காட்டிய நெறிமுறைகளை வகுத்துக் காட்டினார்கள். வேதத்தை வைதீகர்களும், ஆகமத்தை ஆதி சைவர்களும் பின்பற்றி உலகம் உய்வதற்காக வேள்விகள் செய்தும், ஆலய பூஜைகள் செய்தும் இன்றளவும் பணி  செய்து வருகிறார்கள்.  இவ்வாறு அடிப்படையான வேதத்தையும், ஆகமத்தையும் பேணி வரும் மரபினரை ஆதரிப்பதும், ஆலயங்களில் ஆகமப்படி வழிபாடுகள் நடைபெறச் செய்வதும் மக்களது தலையாய கடமை ஆகும். சிவாக்னி என்ற பெயரில் வெளிவரும் பதிவுகள், ஆகமங்கள் பற்றிய செய்தித் துளிகளும், ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளும், ஆதி சைவ சிவாச்சார்யர்களது வாழ்வாதாரம் பற்றிய தகவல்களும் அடங்கியதாக இருக்கும். வழக்கம்போல் அன்பர்கள் வரவேற்பர் என நம்புகிறோம். எல்லாம் சிவன் செயல்.  

                           ஆகமம் ஆகி நிற்கும் இறைவன் 

ஆகமங்கள்  பரமேசுவனது ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று மாணிக்கவாசகர் அருளுவதை, "  உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் " என்றும், " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்பதாலும் அறியலாம். பழம் பெரும் நூலான திருமந்திரமும் ஆகமச் சிறப்பைப் பேசுகிறது. இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்களையும் அவற்றைப் போதித்த ஆச்சார்யர்களின் பெயர்களையும் இங்கு தருகிறோம்:

காமிகாகமம் , யோகஜம்,சிந்தியம்,காரணாகமம்,அதம்,தீப்த ஆகமம், குஷ்மம்,சஹஸ்ர  ஆகமம், அம்சுமான் ஆகமம், சுப்ரபேதம், விஜயாகமம்,நிக்வாசம், ஸ்வயம்புவம், அனலம், வீராகமம், ரௌரவாகமம் ,மகுடாகமம், விமலாகமம், சந்திர ஞானம், முகபிம்பாகமம்,புரோத்திதாகமம்,லலிதாகமம், சித்தியாகமம், சந்தானாகமம், சர்வோக்தமம், பாரமேச்வரம்,கிரணாகமம், வாதுளாகமம்  என்பன சிவாகமங்களின் பெயர்கள்.

மேற்கண்ட ஆகமங்களை முறையே, தூர்வாச சிவாசாரியார், பிங்கள சிவாசாரியார், உக்ர ஜோதி சிவாசாரியார்,  கபோதக சிவாச்சார்யார், கண்ட சிவாச்சார்யார் , விஷ்ண கண்ட சிவாசாரியார், விதயர சிவாசாரியார், ராம கண்ட சிவாசாரியார், ஞானசிவ சிவாசாரியார், ஞான சங்கர சிவாசாரியார், சோம சம்பு சிவாசாரியார், பிரம்ம சம்பு சிவாசாரியார், த்ரி லோசன சிவாசாரியார், ராமநாத சிவாசாரியார், ஈசான சிவாசாரியார், வருண சிவாசாரியார்,பிரசாத சிவாசாரியார், அகோர சிவாசாரியார் ஆகியோர் அவற்றைப் போதித்தனர். 
                                                   தகவல்: ஆதிசைவ குல இளம் அர்ச்சகர் 
                                             ****************
ஆகமக் கோயில் 

நமக்குத் தெரிந்த வரை இந்த  இருபத்தெட்டு ஆகமங்களுக்கும் இருபத்தெட்டு சிவ லிங்கங்கள் அமைத்து ஆகமக் கோயில் இருக்கும் ஒரே இடம், விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிராகாரத்தில் உள்ளது . இதனை ஆகமம் படித்தவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும். ஆகம லிங்கங்களின் நடுவில் சுப்பிரமணியர், தேவியருடன்  நின்ற வண்ணம் தரிசனம் அளிக்கிறார். பிரம்மண்யத்தைக் காப்பதே தொழிலாகக் கொண்ட பெருமான்  இவ்வாறு காட்சியளிப்பது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.  
                                         ******************

Saint Manikka vasagar describes Sivagama as the form of Lord Siva. As the 28  Agamas emerged from His five faces, He feels immensely happy and bless those who recite and follow them by coming close to them.  28 acharyars have propagated these Agamas (Kamikam to Vaadhulam). One should not miss to worship the Agama Lingas inside Vridha Gireeswara Swami Temple, Vridhachalam where Lord Subramanya is seen amidst the 28 Sivalingas as one who protects Vedhas and Agamas .  


சிவாசாரியார் ஊரில் இல்லாதபோது வேறு மரபினர் பூஜை செய்யாது சிவபெருமானே சிவாச்சாரியார்  உருவில் வந்து பூஜை செய்ததாகத் தல புராணங்கள் கூறுகின்றன. இதனைத்  தன்னைத் தான் பூஜித்தல் என்பார்கள். 

திருவையாறு,திருவிடைமருதூர் ,கஞ்சனூர் போன்ற தலங்களில் ஐதீக விழாவாக இந்நிகழ்ச்சி இன்றளவும் கொண்டாடப்படுகிறது.இதனால், ஆகமங்கள் மூலம் இறைவனைப் பூஜித்தால் உரிய பலன் விளையும் என்று அறியப்படுகிறது. 

There are places like Thiruvaiyaru,Thiruvidaimarudur and Kanjanur where Lord Shiva is said to have worshipped Himself by carrying out the rituals as prescribed in the Agamas in the absence of Sivacharyars. It shows the importance of Agamas to derive the desired results. 

சிவாகமங்கள் மூலம் ஆலயங்களில் நடைபெற வேண்டிய பூஜை முறைகள், விழாக்கள் முதலிய தகவல்களோடு, சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் பற்றியும் அறிய முடிகிறது. அவற்றைப் பற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்.

Sivagamas not only speak about the daily rituals in Temples and procedures for conducting festivals but also tell us elaborately on Saiva Sidhantha. We will present these aspects in the forthcoming posts.